“நான் இப்போது சினிமாக்காரன் இல்லவே இல்லை.. நான் ஒரு அரசியல்வாதி, எனக்கும் சினிமாவுக்கும் சம்பந்தமில்லை” என்று கருத்து தெரிவித்து, சினிமா பிரச்னையில் குரல் கொடுக்கும் அரசியல் தலைவர்களை மிரள வைத்துள்ளார் விஜயகாந்த்.
விஜய் நடித்து சமீபத்தில் வெளியான ‘தலைவா’ படம், சமீப நாட்களில் பலத்த சர்ச்சையில் சிக்கியிருந்தது. அதன் பின்னணியில் அரசியல் இருந்ததாகவும் கூறப்பட்டது. அதன்பின் விஜய் தரப்பினர், “அவருக்கு அந்த (அரசியல்) ‘தலைவா’ ஆகும் ஐடியா ஏதும் இல்லிங்க.. வெறும் பயாஸ்கோப் ‘தலைவா’ மட்டும்தான்” என்று கூறியதையடுத்து ஓவர் நைட்டில் எல்லாமே செட்டில் செய்யப்பட்டதாகவும் மீடியாக்களில் செய்தி வெளியானது.
இதையடுத்து, சினிமா உலகில் இருந்து வந்து அரசியலில் நிஜமாகவே ‘தலைவா’ ஆகியுள்ள விஜயகாந்த்திடம் இது தொடர்பாக கேட்டபோதே, அவர் “எனக்கும் சினிமாவுக்கும் சம்பந்தமில்லை” என்று தெரிவித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த விஜயகாந்த், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது, “விஜய் நடித்த தலைவா படத்தை தமிழகத்தில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது ஏன்?” என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, “சினிமாவுக்கும், எனக்கும் இப்போது சம்பந்தம் இல்லை. நான் தற்போது அரசியலில் உள்ளேன்” என்றார்.
ஐயையோ...
No comments:
Post a Comment